AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, December 11, 2009

SORKKA VAASAL MAGIMAI (SRI RANGAM)

SORKKA VAASAL MAGIMAI (THIRU VARANGAM)


மார்கழி மாசம் வந்தால் வைகுண்ட ஏகாதேசி என்று கூட்டம் கூட்டமாய்சிறிரங்கம் முதலிய ஊர்களுக்கு பணச் செலவு செய்து கொண்டு போவதும் பொய்யையும் ,புளுகையும் காவடிக் கதையை சொல்வதும் , அறுத்து சமைத்த பாம்பும் , ோழியும் , மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும்: மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாகபட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இது போல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும் , அழுக்கு குட்டைகளில் குளித்தும் ுடித்தும் ' பஞ்சமிர்தம் 'எனும் அசிங்கத்தை உண்டும் , அதனால் 'காலரா ' போன்ற கொடிய நோய்கு இரையாவதும் நாம்கண்டது தானே ! அசிங்கம் , ஆபாசம் , அறியாமை , இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன !


சிறிரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிரார்களே, தன் தாத்பரியத்தைத் கேளுங்கள் :

"நாகபட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்ரகத்தை திருடி வந்து, அதை உருக்கி டுத்து பணமாக்கி , திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறிரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான் . ஆனால் அக்கோயிலின் சின்னத்தையே - அதாவது 'நாமத்'தையே சாத்திவிட்டான் . கூலி கேட் தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று ூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று ிட்டான் - ஒடக்கறான் துணையோடு !


அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும்,அந்தத் துறைக்குப் 'பார்வானதுரை ' (பார் வானம் - சுடுகாடு , பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச , அவ்வாறே அளிக்கப்பட்டு , அன்று கொல்லப்பட்டவர்களுக்கு எல்லாம் ' முக்தி ' யும் அளிக்கப்பட்டதாம் ! ('திருமங்கை ஆழ்வார் வைபவம் ') என்ற நூல் ஆதாரப்படி ).


சிறிரங்கம் வைகுண்ட எகாதேசியின் போது திறக்க படுகின்றதே 'சொர்க்கவாசல் ' - அது எங்கே செல்லுவது தெரியுமா ? திருமங்கை ஆழ்வார் ொள்ளிடக் கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானதுரைக்கு ! சொர்க்க வாசல் புரிகிறதா ?

- தந்தைபெரியார்


No comments:

Post a Comment