SORKKA VAASAL MAGIMAI (THIRU VARANGAM) 
மார்கழி மாசம் வந்தால் வைகுண்ட ஏகாதேசி  என்று கூட்டம் கூட்டமாய் சிறிரங்கம் முதலிய ஊர்களுக்கு   பணச்  செலவு செய்து கொண்டு போவதும்   பொய்யையும்  ,புளுகையும்   காவடிக்  கதையை  சொல்வதும்  ,  அறுத்து  சமைத்த  பாம்பும் , கோழியும்  , மீனும் உயிர் பெற்று விட்டது  என்பதும்: மண் சர்க்கரை  ஆகிவிட்டது  என்பதும், வெட்டித்  துண்டாகபட்ட  குழந்தை உயிர் பெற்று  விட்டது என்பதும் இது போல்   இன்னும் பல பொய்களை  வெட்கமில்லாமல்   சொல்வதும் , அழுக்கு   குட்டைகளில்  குளித்தும்  குடித்தும்   ' பஞ்சமிர்தம் 'எனும்  அசிங்கத்தை  உண்டும் , அதனால்   'காலரா '  போன்ற கொடிய நோய்கு  இரையாவதும்   நாம்கண்டது தானே ! அசிங்கம்  , ஆபாசம் , அறியாமை , இவைதானே   நமது பண்டிகைகளாக  இருந்து வருகின்றன  !
சிறிரங்கம் சொர்க்கவாசல்  திறப்பு   என்று கதை அளக்கிரார்களே, அதன்  தாத்பரியத்தைத் கேளுங்கள்    :
"நாகபட்டினத்தில்    இருந்து ஜைனக்   கோயிலின்  பொன் விக்ரகத்தை   திருடி  வந்து, அதை உருக்கி எடுத்து     பணமாக்கி , திருமங்கை   ஆழ்வார்   என்ற நாமக்காரன்  சிறிரங்கம்  கோயிலின் மதில்களைக்  கட்டினான்  . ஆனால்  அக்கோயிலின்  சின்னத்தையே   - அதாவது  'நாமத்'தையே  சாத்திவிட்டான் . கூலி  கேட்ட   தொழிலாளர்களை  ஓடத்தில்  ஏற்றி,    திரவியம்  தருகிறேன்  என்று கூறி , காவிரி  தீரத்தில்  கொண்டு  போய்க்  கவிழ்த்துக்  கொன்று விட்டான்   - ஒடக்கறான்  துணையோடு  !
அவர்களை ஆற்று  வெள்ளத்தில்  தள்ளி,  படுகொலை செய்த இடத்திற்குக்   கொள்ளிடம்  என்றும்,அந்தத் துறைக்குப்   'பார்வானதுரை ' (பார்  வானம்  - சுடுகாடு , பார்வணம்   - சிரார்த்தம் செய்யும்   இடம்) என்றும் பெயரிட  ஆண்டவனிடம்   இறைஞ்ச , அவ்வாறே  அளிக்கப்பட்டு  , அன்று கொல்லப்பட்டவர்களுக்கு எல்லாம்   ' முக்தி ' யும்  அளிக்கப்பட்டதாம்  ! ('திருமங்கை  ஆழ்வார்  வைபவம் ')  என்ற நூல் ஆதாரப்படி ).
சிறிரங்கம் வைகுண்ட  எகாதேசியின்     போது  திறக்க படுகின்றதே  'சொர்க்கவாசல்  ' - அது எங்கே செல்லுவது    தெரியுமா    ? திருமங்கை  ஆழ்வார்  கொள்ளிடக் கரையில்   தொழிலாளர்களைக்   கொன்று சிரார்த்தம்  செய்த அந்தப்  பார்வானதுரைக்கு ! சொர்க்க  வாசல் புரிகிறதா  ?
- தந்தைபெரியார் 
 
 
No comments:
Post a Comment