AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, December 27, 2010


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

நண்பர்களே, தமிழர்களே,
எதிர் வரும் தமிழர் திருநாளாம், தமிழ்ப் புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளாக சிலவற்றை கூற விரும்புகிறேன்....

இதோ...

நம்முடைய பெயர்களுக்கு முன் ஆங்கில எழுத்தை (முதல் எழுத்தாக) பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்...

நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர்களை சூட்டுவோமாக...

நம்முடைய தாய் மொழியில் கையொப்பம் இடுவோமாக....

பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், பிறந்த நாளாகட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதை தவிர்ப்போம்...

நம் இல்லங்களின், கடைகளின், வணிக நிறுவனங்களின் பெயர்களை இனிய தமிழில் சூட்டுவோமாக....

வழிபாடுகளை தமிழில் செய்வீர்களாக...

வாகனங்களில் தங்களின் விருப்பமான பெயர்களை ஒட்ட நினைப்பவர்கள் தமிழில் ஓட்டலாமே....

தமிழர்களின் வணிக நிறுவனங்களிலே நம்முடைய வாணிபத்தை செய்வோமாக...

தமிழர்களால் நடத்தப்படும் இதழ்களை மட்டுமே விலைக் கொடுத்து வாங்குவோமாக...

நாம் உரையாடிக்கொண்டிருக்கும் (ஓர்குட், பேஸ் புக் .... ) போன்ற சமூக தளங்களில், நல்ல தமிழ் பெயர்களை அடையாளமாகக் கொண்டு உரையாடலாமே... நம்முடைய முகமூடிகளை தவிர்த்து உண்மையான முகத்தை உலகிற்கு காட்டலாமே....


மேற்க்கூறப்பட்டுள்ளவைகளை, நம்மால் தான் செய்யப் பட வேண்டும்...மற்ற இனத்தவர்கள் சரியாகத் தான் உள்ளனர் ....
இவைகளை நாம் அனைவரும் செய்வோம் என்றால்,,,
தன் மானம், இன உணர்வு பெறுவது உறுதி....


ஓர் வேண்டுகோள்....
தமிழர்கள் அனைவரும்
"உணர்ச்சி கவிஞர். காசி.ஆனந்தனின்"
தொகுப்புகளை ஒரு முறையேனும் வாசித்தால் நல்லது....

நன்றி,
இரா.அழகிரி
தமிழகம்.

Sunday, December 19, 2010

கூவி அழைக்கிறோம்.............






கூவி அழைக்கிறோம்!


மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்-களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.

மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்-காரனையும், முதலாளியையும் தொழிலாளி-யையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மா-வையும், சாதாரண ஆத்மாவையும் அவன-வனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!

ஜாதி, சமய, தேசச் சண்டையற்று -_ உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்-கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.

ஈ.வெ.ரா. குடிஅரசு 30.7.1933

Tuesday, December 7, 2010

அன்புள்ள தமிழர்களே,
இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, கொன்று குவித்த, அரசாங்கத்தின் மீது, நம்மிடம் இருக்கும், போர்க்குற்ற படங்களையோ அல்லது ஒளி-ஒலி காட்சிகளையோ, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள் ....
ஐ நா வின் குழு:
panelofexpertsregistry@un.org

Ms. Sooka Yasmin
YSooka@fhr.org.za
webmaster@justice.gov.za

Mr. Steven R. Ratner
sratner@umich.edu

Mr. Marzuki Darusman
contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org


மேலும்

கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?
http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is
SIGN THE PETITION
நன்றி, More Thanks

Friday, November 26, 2010

பார்ப்பவர்கள் யார்??? ஓர் அரிய புள்ளி விவரம்...

ஓர் அரிய புள்ளி விவரம்

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.
ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.
உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:
சி.என்.என். அய்.பி.என். CNN-IBN
மும்பையில் பார்ப்போர் 0.24
கொல்கத்தாவில் 0.06
டில்லி 0.21
சென்னை 0.03
பெங்களூரு 0.11
அய்தராபாத் 0.17
சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி. NDTV
மும்பை 0.16
கொல்கத்தா 0.11
டில்லி 0.13
சென்னை 0.14
பெங்களூரு 0.07
அய்தராபாத் 0.06
சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ் TIMES NOW
மும்பை 0.08
கொல்கத்தா 0.08
டில்லி 0.09
சென்னை 0.33
பெங்களூரு 0.19
அய்தராபாத் 0.12
சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?
ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.
ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.
இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.
இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!
அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!
புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்
ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

SOURCE : WWW.VIDUTHALAI.COM

Sunday, November 14, 2010

தமிழ் பூக்கள் - 99

தமிழ் பூக்கள் - 99


காந்தள்
ஆம்பல்
அனிச்சம்
குவளை
குறிஞ்சி
வெட்சி
செங்கொடுவேரி
தேமா
மணிச்சிகை
உந்தூழ்
கூவிளம்
எறுழ்
சுள்ளி
கூவிரம்
வடவனம்
வாகை
குடசம்
எருவை
செருவிளை
கருவிளம்
பயினி
வானி
குரவம்
பசும்பிடி
வகுளம்
காயா
ஆவிரை
வேரல்
சூரல்
சிறுபூளை
குருநறுங்கண்ணி
குருகிலை
மருதம்
கோங்கம்
போங்கம்
திலகம்
பாதிரி
செருந்தி
அதிரல்
சண்பகம்
கரந்தை
குளவி
மாமரம்
தில்லை
பாலை
முல்லை
கஞ்சங்குல்லை
பிடவம்
செங்கருங்காலி
வாழை
வள்ளி
நெய்தல்
தாழை
தளவம்
தாமரை
ஞாழல்
மௌவல்
கொகுடி
சேடல்
செம்மல்
சிறுசெங்குரலி
கோடல்
கைதை
வழை
காஞ்சி
கருங்குவளை
பாங்கர்
மரவம்
தணக்கம்
ஈங்கை
இலவம்
கொன்றை
அடும்பு
ஆத்தி
அவரை
பகன்றை
பலாசம்
பிண்டி
வஞ்சி
பித்திகம்
சிந்துவாரம்
தும்பை
துழாய்
தோன்றி
நந்தி
நறவம்
புன்னாகம்
பாரம்
பீரம்
குருக்கத்தி
ஆரம்
காழ்வை
புன்னை
நரந்தம்
நாகப்பூ
நள்ளிருணாரி
குருந்தம்
வேங்கை
புழகு


Source: www.karkanirka.wordpress.com

Friday, November 5, 2010

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்

சாமி.சிதம்பரனார்

தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே சுட்டுக் கதையாக முடிகின்றபோது, தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை-பொருந்தாத போலிக் கதையை ஆதாரமாகக்கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண்டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?


இந்துக்கள் என்பவர்கள் கொண்-டாடும் பண்டிகைகளில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும், இந்து மதவழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்-வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக் கதை கற்பிக்கப்பட்டு இருப்-பதை யாவருமறிவோம். அவ்வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையைச் சுருங்கக் கூறி முடித்துவிட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளி-யிடுகின்றோம்.

இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றி-யுருக்கொண்டு வந்து இரண்யாட்-சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப்பொழுது பன்றியு-ருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பி-னாளாம், உடனே பன்றியும் பூமி-தேவியும் திருமணம் செய்து-கொண்டார்-களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர். இவன் மாகிஷ்மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டி-ருந்தான். துவஷ்டாவின் பெண்ணா-கியணா கசேரு என்பளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறை பிடித்துக்கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசிபரின் மனைவியாகிய அதிதியென்பவளின் காதணியையும், வருணனுடைய குடை-யையும் கவர்ந்து கொண்டானாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்-களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தானாம். இவ்வாறே இவன் அனேக, ஆண்டுகள் வாழ்ந்து வந்தானாம்.

இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல், தேவர்களனை-வரும், முறையிட்டதைக் கேட்ட திருமால் அவனைக் கிருஷ்ணாவதாரத்-தில் கொன்று விடுவதாக வாக்-களித்திருத்திருந்தாராம். அதன்படியே, கிருஷ்ணன், ஒரு சமயத்தில் திருமாலின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை-யென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தையடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகா-சுரன் இறக்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண்டாடும்படி செய்ய வேண்டுமென்று வேண்டிக்-கொண்டானாம். அவன் வேண்டு-கோளை நிறைவேற்றவேண்டுமென்று சத்தியபாமையும், விரும்பினாளாம். அதற்கறிகுறியாகத்தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இதுதான் பாகவதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.

இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக விருக்க வேண்டுமென்-பதைச் சிறிது ஆராயலாம். பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்தான் என்னுங் கூற்று பொருந்-துமா? பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிப்பது எப்படி? பூமியெங்கிருக்கின்றது, கடல் எதன் மீது இருக்கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ? பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்-பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண்ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டி-ருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை-யன்றோ? ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி அப்பெண் ஒரு பன்றியோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள்ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதையையும் உண்மை-யென்று நம்புவார் பகுத்தறிவுடைய-ராகவிருக்க முடியுமா?

இனிக் கடைசியாக நரகாசுரனைக் கொன்றதாகக் கூறப்படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்-படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்குத் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகனைக் கொலை புரிந்த கதைதான் தீபாவலியென்று முடிக்கின்-றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயாரையும் பக்கத்தில் வைத்துக்-கொண்டு கொன்றானாம், பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமை-யைத்தான் பெருமையாகப் பேசுகின்-றோம். அந்தோ, இதை விட குறைந்த அறிவுடைய செயல் வேறென்னவிருக்-கின்றது!

மேற்கூறிய உத்தமமான புராணக்-கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணர லாம். சிலர் தீபாவலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின்மூலம் நம்மையும் நமது வீடுவாசல்களையும் சுத்தஞ்-செய்கின்றோம் என்கிறார்கள். எண்ணெய் தேய்த்து முழுகுவதும் புதிய ஆடையை உடுத்துக்கொள்வதும், சுகாதாரத்திற்கறிகுறியாம். வாணங்களை வாங்கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்-ககொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணியடைவதும் சுகாதாரமாம் என்னே இவர்தம் அறியாமை?

நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்-கால் ஏராளமான பொருளை வீண் செலவு செய்யும், பொருளற்ற மத சம்பந்தமான சடங்குகளில் ஒன்றுதான் தீபாவலி என்றுதான் கூறுவோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்ற, தென்பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக்கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங்கும், புதிய ஆடைகளுக்காக-ஆடம்பரமான உடைகளுக்காக-அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக்-கொடுக்கிறோம். ஒரு பயனுமற்ற வெடிகளுக்காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ? நமது இச்செய்-கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூற-மாட்டார்கள்?

இம்மட்டோ! இன்னும் இவ்வெடி-களால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காயவெடி செய்வ-தனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்-தனை பேர்? கை யிழக்கின்றவர், காலிழக்-கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடு-வோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்-கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலி யென்னும் பாழும் கடன்கார மதச்சடங்கன்றோ? மதச்-சடங்கு என்பதைவிட மடச்சடங்கென்று கூறுவது பொருந்துமென்று நினைக்கின் றோம்.

இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங்களையுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக்குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம், தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பார்வை யிடுவீர்களாயின் பலகாரப் பெருமையையும் தீபாவளியின் மாண்-பையும் உணரலாம்.

ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக்கொண்டிருப்பதனால்- எவ்வளவு துன்பமுண்டாகின்ற தென்-பதை ஆராய்ந்து பாருங்கள். இந்தத் தீபாவளிச் சடங்கினால், நமது பொரு-ளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேதமுண்டாகின்ற-தென் பதைச் சிறிது கூர்ந்து நோக்கு-வோமாயின் இதுபோன்ற சடங்கு-களைக் கொண்டாட-மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகையிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை- ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத் தீபாவலிப் பண்டிகையை-இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளை-யிடும் இத்தீபாவலிப் பண்டிகையை ஒழிப்பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறனா மூடச்சடங்குகளையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில்தான், நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

Tuesday, October 26, 2010

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்


பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு

பக்தர்களே, பிள்ளையார்தான் வல்லபை கணபதி வரலாறு எவ்வளவு ஆபாசம் - சிதம்பரத்திலும், மத்தூரிலும் இந்த கணபதி உள்ளது.

(திருவல்லிக்கேணி கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 18.9.2010).

Tuesday, October 19, 2010

தீபாவளியும் - அவதாரங்களும்!

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரி-வினரான சைவர் ஏற்றுக் கொள்-வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவ-தாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து-விட்-டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புரா-ணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.
நாம்தான் வேதங்களைப் படிக்-கக்-கூடாது. நாம் படிப்பதற்காகத்-தான் புராணங்களே எழுதப்பட்-டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்-றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவ தாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான் எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவ-தாரம் _ தான் என்று கூறிப் பெண்-களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.
முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்-டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடி-யது. - மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனி-தன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விக-டன், காமகோடி, ஆன்மீகம்_- அருள்சோதி என்றெல்-லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.
கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை - 14 ஆம் அவ தாரம் நரசிம்மம் - 15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசு ராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.
பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்-தான் அதன் அவ-தாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்-டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றி-யின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!
பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே_- விஷ்ணுவே_- பூமாதேவிக்குச் சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்ய-பன்,- அதிதி தம்-பதிகளின் புத்திரன், விசு-வாஸ்-வனன். அவன்தான் சூரியன் என்-கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்-திலேயே சூரியனை அறி-முகப்படுத்திவிட்டு 15 ஆம் புரா-ணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?
இதே வராக (பன்றி) அவ-தாரத்-தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்ட-தாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமி-தேவியை எடுத்ததாம். அதன் வேண்டு-கோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளிய-தாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புரா-ணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).
யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்-பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்-களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை பெரிய திருமொழிப் பாசுரம்
ஏனாகி உலகிடந்து அன்று இரு-நிலனும்
பெருவிசும்பும் தாளாய பெரு-மான்
எனப் பாடுகிறது. பிறகு நர-காசுரன் எங்கே வருகிறான்?
கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கட-லுக்குள் நுழைந்தார். இரண்யாட்-சத-னுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.
பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.
ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்-போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவி-யும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்-யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?
ஒரு மாநிலத்தில் வாமன அவ-தாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதை-யுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.
ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.
இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதை-யளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...
புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும்-கூடப் புத்திசாலித்தனம் தேவைப்-படுமே! பலப்பல நபர்கள் பலப்-பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதை-கள்தான் புராணங்கள்! அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!
(விடுதலை, 19.10.2006)

Source: www.viduthalai.com

Tuesday, September 14, 2010

அண்ணா எழுப்பிய கேள்விகள்






திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?

13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?

19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?

36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?

41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46) அவைத் தனித்தனி கடவுள் களா?

47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?

55) மலையரசன் மகனென்றால் என்ன?

56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?

58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?

60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?

61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?

64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69) வருணாசிரமம் உண்டா?

70) உண்டென்றால் ஆதாரம் எது?

71) இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?

73) சைவ மடங்கள் எதற்கு?

74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

Thursday, July 29, 2010

ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோ குளோபின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத் தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந் தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக் களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைகோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த் துக் கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்தச் வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள பிளேட்டலட் அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக் கும் சக்தி பிளேட்டலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவிகித அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவிகித அளவுக்கு ரத்த சிவப்பு அணுக் களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவிகி தம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், ரத் தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங் களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் எவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் என ரத்தத் தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு அய்ந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 65 கி.மீ.! மோட்டார் சைக் கிளின் சராசரி வேகத்தை விட இது அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன் அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியி லிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லா திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய் கிறது. கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதம் , தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் செயல்பட ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம்தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக் களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல் லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார் பன் டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியாக வெளியேற வைப்பதும் ரத்தம்தான்.

ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோ குளோபின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத் தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந் தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக் களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைகோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த் துக் கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்தச் வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள பிளேட்டலட் அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக் கும் சக்தி பிளேட்டலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவிகித அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவிகித அளவுக்கு ரத்த சிவப்பு அணுக் களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவிகி தம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், ரத் தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங் களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் எவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் என ரத்தத் தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு அய்ந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 65 கி.மீ.! மோட்டார் சைக் கிளின் சராசரி வேகத்தை விட இது அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன் அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியி லிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லா திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய் கிறது. கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதம் , தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் செயல்பட ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம்தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக் களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல் லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார் பன் டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியாக வெளியேற வைப்பதும் ரத்தம்தான்.

Tuesday, July 27, 2010

நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்





காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.

அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

வேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால்
உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.

முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,

தவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.

உடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.

எனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.


Source: pathivu.com

Saturday, June 26, 2010

கீதாசாரம்

கீதாசாரம்

கடமையைச் செய் பலனை எதிர்ப்பார்காதே என்பது பகவத்கீதையின் அமுதமொழி என்று கீதையைப் படிக்காதவர்கள் சொல்லித் திரிகிறார்கள். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கருத்து பகவத்கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. தற்பொழுது கீதாசாரம் என்ற தலைப்பில் சில சொற்களைத் தாங்கிய அட்டைகள் தமிழகத்தில் பரவலாக வீடுகளிலும், கடைகளிலும், அரசு நிறுவனங்களிலும், வங்கிகளிலும் காணப்படுகின்றன. கீதாசாரத்தில் காணப்படும் சொற்கள்,

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகாவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு
எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது ஆகிறது .
இதுவே உலக நியதியும் என்னுடைய படைப்பின் சாராம்சமுமாகும். "



மேலே காட்டிய கீதாசாரத்தின் கருத்துக்களை நோக்கினால் அக்கருத்துகள் படிப்பவரின் உள்ளத்தையும் ஊக்கத்தையும் மழுங்கச் செய்யும் கருத்துக்கள் என்பதை உணரலாம். தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கண்ட உள்ளங்களுக்கு வேண்டுமென்றால் அச்சொற்கள் ஓரளவு ஆறுதல் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட கருத்துகள் பகவத்கீதையில் சொல்லப்படவில்லை.

ஒரே தெருவில் ஒரு வீட்டில் திருமணம் நடக்கும். மற்றொரு வீட்டில் ஒருவர் இறந்து விடுவார். திருமணம் நடைபெறும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும், இழவு வீட்டில் துன்பம் இருக்கும். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் உறவினருக்கு ஆறுதல் மொழி கூறுவார்கள். திருமண விழாவில் நலுங்கு பாடுவார்கள். இழவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள். திருமண விழாவில் மணமக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுவார்கள். திருமண விழாவில் மணமக்கள் பெற்ற பரிசுப் பொருட்கள், சீர் முதலியவற்றை பற்றி மக்கள் பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் பற்றி பேசப்படும்.

இறந்தவன் உயிரோடு இருக்கும் போது அவனைப் பாராட்டிப் பேச விரும்பாதவர்கள் கூட இன்று அவனைப் பாராட்டுவார்கள். நேற்று இதே நேரத்தில் என்னோடு நன்றாகப் பேசி கொண்டிருந்தார். இன்று திடீர் என்று இறந்துவிட்டாரே என்று கூறுவார் ஒருவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நம்ம ஊருக்கு பிழைப்புத் தேடி வந்தார். நன்றாக சம்பாதித்து விட்டார். ஆனால், எதையும் திக்காமல் போய்விட்டார். அவர் பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்று ஒருவர் நினைப்பார். என்ன சொத்து சேர்த்து என்னப் பயன்? சுடுக்காடிலே கொண்டுப்போய் அவர் போட்டிருந்த அரைகான்கயிற்றையும் கழற்றி விட்டுத் தான் எரிக்கப் போகிறார்கள். அம்மணமாய் பிறந்தான் அம்மணமாய் போகிறான். இது தான் வாழ்க்கை என்ற தத்துவம் உரைப்பார் ஒருவர். பிணத்தை கற்றிக் கொண்டு வயிற்றிலேயும் மார்பிலேயும் கைகளால் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாட்டு பாடுவார்கள் சிலர். நேற்று அரசனைப் போல் நடந்து வந்தாயே, இன்று பிணமாய் போகிறாயே! சொத்து சுகம் சேர்த்தாயே, அனுபவிக்காமல் (துய்க்காமல்) போறீயே! போன்ற கருத்துகள் அடங்கியப் புலம்பலை ஒப்பாரியாகப் பாடுவார்கள்.

'வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் நிலையை வாழ்ந்தவர் யாரடா' என்ற தத்துவங்களை எல்லாம் இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பவர்கள் பேச்சுகளிலும் ஒப்பாரி பாடல்களிலும் நாம் கேட்கலாம்.

இழவு வீட்டில் பிணத்திற்கு முன்னால் இருந்து கொண்டு புலம்பும் புலம்பலுக்கும் கீதாசாரத்திர்க்கும் ஏதேனும் வேற்றுமை உண்டா? கீதாசாரம் என்பது இறந்தவனின் பிணத்தின் முன் நின்று இறந்தவனின் ஆத்மா சாந்தியடைவதற்க்காக சொல்லப்படும் செய்திகள் போலல்லவா இருக்கிறது?

இந்த புலம்பற் சொற்களில் ஏதோ சிறப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் தங்கள் இல்லங்களிலும், கடைகளிலும், கீதாசாரத்தை தொங்கவிட்டிருக்கிறார்கள். கீதாசாரத்தை ஒரு பிணத்தின் முன் நின்று கூறிப் புலம்பலாம். ஆனால் திருமண விழாவில் தாலிக் கட்டிய கணவனிடம் சென்று எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையதாகும் என்று கீதாசாரத்தை யாரேனும் சொல்லத் துணிவார்களா? வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவரும் வாடிக்கையாளரிடம் ' எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவனுடையது ஆகும்' என்று கீதாசாரத்தை வங்கி மேலாளர் கூறுவாரா? கீதாசாரத்தை பகவத்கீதையின் சாறு என்று கூறுகிறார்களே, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்போம். எது நடந்ததோ அது நன்றாக நடந்தது என்று கீதாசாரம் கூறுகிறதே அப்படியென்றால் சீதையை இராவணன் தூக்கிச் சென்றானே அது நன்றாக நடந்தது தானே. இராமன் ஏன் சீதையை இழந்து வாட வேண்டும்? ஏன் சீதையை தேட முயல வேண்டும்? இன்று சீதை (எது) உன்னுடையவலாக இருந்தாளோ அவள் (அது) நாளை இராவனனுடையவள் என்று நினைத்து அமைதியாக அல்லவோ இருந்திருக்கவேண்டும். இராமனும், கிருட்டிணனும் திருமாலின் அவதாரங்கள்தானே. அவதாரம் சொல்வதையே மற்றொரு அவதாரம் போற்றவில்லையே.

கீதாசாரத்தை சமச்க்கிருதத்திலியே எழுதி மாட்டியிருந்தால் கூட நாம் ஒருவேளை வருந்தாமலிருக்கலாம். தமிழிலியே கீதாசாரத்தை எழுதித் தொங்கவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிற தமிழர்களின் நிலையை என்னென்று கூறுவது? பெரும்பாலான தமிழர்கள் பார்ப்பன புரோகிதரை வைத்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பார்பன புரோகிதன் சமஸ்கிருதத்தில் தான் ஏதோ உளறுவான். அவன் சமஸ்க்கிருதத்தில் புலம்புவதால் மக்களுக்கு அவன் கல்யாண மந்திரம் ஓதுகிறானா அல்லது கருமாதி மந்திரம் ஓதுகிறானா என்பது தெரியாது.

'மாங்கல்யம் தந்துநானே ந மம ஜீவ ந ஹேது நா கண்ட் டே பத்னாமி சுபகே சஞ்சீவ சரத சதம்'

'இது மங்கலகரமான் கயிறு. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமாக இதை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீ நூறு ஆண்டு வாழ்வாய்' . தாலி கட்டுகிறவன் ஒரோன். ஆனால் பலர் முன்னியிலையில் மணமகளின் கழுத்தில் மங்கல கயிறு கட்டுகிறேன் என்று உறுதிமொழி எடுக்கிறான் புரோகிதன்.

இந்த இழிவு இன்னும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உறுதிமொழி சமஸ்க்கிருத மொழியில் இருப்பதால் புரியாமல் இழிவை தேடிக் கொள்கிறார்கள். ஆனால் கீதாசாரம் என்று தமிழிலியே எழுதியதையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார்களே தமிழ் மக்கள்.

நன்றி
பகவத்கீதை - ஒரு பார்வை
ஆசிரியர் - வே. இந்திரசித்து

Friday, June 11, 2010

அன்புள்ள நண்பர்களே,....... Dear Friends,.......

அன்புள்ள நண்பர்களே,

சமீப காலமாக, நீங்கள் அறிந்திருப்பீர்கள், பேரினவாத இலங்கை அரசுடன், நாட்டுடன் இந்திய பண முதலைகளில் ஒரு நிறுவனமான, ஏர்டெல்(AirTel)
என்ற அலைபேசி நிறுவனம் வணிக ஒப்பந்தம் புரிந்துள்ளது. பலத்த எதிர்ப்புகளையும் மீறி , அப்பாவி மக்களை கொன்று குவித்த அரசுடன் வணிகத் தொடர்பு வைக்க உள்ள இந்நிறுவனத்தை கண்டிப்போம், அறவே புறக்கணிப்போம்.
ஒரு நபரில் தொடங்கி ஒரு கோடி வரை நீக்க முடியும், ஆதரியுங்கள்,
வேறு நிறுவனங்களின் அலைபேசி அட்டைகளை இன்றே பெறுங்கள்,
சிந்திப்பீர், செயல்படுவீர்.

நன்றியுடன்,
இரா.அழகிரி


Dear Friends,

You all might be aware of the brutal killings of the Tamizh people by the racist SriLankan government. Recently, from India, the private cellular operator, AirTel has signed agreement to start business with the human blood stained ruler of SriLanka. Let us teach a lesson to that operator by surrendering all our AirTel sim cards(if you are a AirTel customer). Boycott all the services by that group, please....
If we start from one person, it will reach to crore numbers. (in tamilnadu alone it has nearly 1.25 crore customers and 13 crore customers in the entire India)
So, we have to share this with our friends and workers, students etc.......
I hope, you will do this for a human cause......

Many Thanks
Azhagiri.R

Thursday, June 10, 2010

நம்ம ஊர் – 25

நம்ம ஊர் – 25

கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.
காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.
கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.
ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.
சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.
தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.
சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.
நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.
கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.
50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.
ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.
செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.
எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.
பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.
கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.
தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.
ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.
புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.
இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.
100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.
மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.
உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.
இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க
தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.
டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.

நன்றி - எல்லைத்தமிழன்

Wednesday, June 9, 2010

நாத்திகர்கள் 81 விழுக்காடு

உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகுகிறது
வியட்நாமில் நாத்திகர்கள் 81 விழுக்காடு

சென்னை, ஜூன் 9_ உலகில் கடவுள் மறுப்பா-ளர்-களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று அறிவியல் தகவல்கள் கூறுகின்றன.
670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள்வரை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் புள்ளி விவரங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த மதிப்பீடு.
இந்தப் போக்கு எதைக்காட்டுகிறது? அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் நாத்திகமும் வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியர் பில் ஜுகர்மேன் கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கி உள்ள நாடுகளில் மதம் இன்னும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருப்ப-தால், உலக அளவில் நாத்திகம் வளருவது என்ற இந்த போக்கு பின்னடைவையே பெற்றுள்ளது எனக் கூறலாம். இந்த நாடுகளில்தான் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், வளர்ந்த நாடுகளை விட மக்கள் தொகைப் பெருக்கமும் இந்த நாடுகளில்தான் விரைவாகவும் உள்ளது என்பதே இதன் காரணம்.
நாத்திகர்களும் (Atheists), கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து அற்றவர்-களும் (Agnostics) அதிகமாக வாழும் 10 நாடுகள்:
1. ஸ்வீடன் 46_85 விழுக்காடு
2. வியட்நாம் 81 விழுக்காடு
3. டென்மார்க் 43_80 விழுக்காடு
4. நார்வே 31_72 விழுக்காடு
5. ஜப்பான் 64_65 விழுக்காடு
6. செக் குடியரசு 54_61 விழுக்காடு
7. பின்லாந்து 26_80 விழுக்காடு
8. பிரான்ஸ் 43_54 விழுக்காடு
9. தென்கொரியா 30_-52 விழுக்காடு
10. எஸ்டோனியா 49 விழுக்காடு
பல காரணங்களை முன்னிட்டு இந்த புள்ளி விவரங்களை மிகச் சிறந்த மதிப்பீடுகள் மட்டுமே எனக் கூறலாம். மேற்கு அய்ரோப்பாவின் வளர்ச்சி பெற்ற நாடுகள், வட அமெரிக்கா மற்றும் சில நாடு-களைத் தவிர வேறு நாடுகளில் பெரும் அள-விலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதில்லை. சில நேரங்களில் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர் என்றும் கூறலாம். கடவுள் என்பதில் முழுமை-யான நம்பிக்கை இல்லை (absolutely not believe in god) என்றோ, நான் மதத்தில் இல்லை (I am not into religion) என்று அவர்கள் பல்வேறு சொற்-றொடர்களைப் பயன்படுத்துகின்றனர். என்றாலும் இந்தப் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரு சரியான மதிப்பீட்டை அளிக்கின்றன.
நாத்திகர்கள் வழக்கமாகவே இளைஞர்களாக, ஆண்களாக, அதிகம் படித்தவர்களாக, சரியான தேர்வை ஆதரிப்பவர்களாக, பெண்உரிமை ஆதர-வாளர்களாக, உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர் என்பதை மக்கள் தொகை இயல் ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்தியர்களில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கடவுள் நம்பிக்கை அற்றவர்-களாக உள்ளனர் என்று 2004 இல் மேற்கொள்ளப்-பட்ட பி.பி.சி. ஆய்வு ஒன்று தெரிவிப்பதாகவும், இந்தி-யர்களில் 5 விழுக்காடு கடவுள் நம்பிக்கை அற்ற-வர்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கில்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சி-யாளர்கள் கண்டுள்ளனர் என்றும் ஜூகர்மேன் குறிப்பிடுகிறார். 88 விழுக்காடு மக்கள் தொடர்ந்து முறையாக தொழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்-டுள்ளனர்.
அய்ரோப்பாவில் நாத்திகம் பரவலாக நிலவுவதாக தோன்றுகிறது. பிரெஞ்சுக்காரர்களில் 33 விழுக்காடும், டச்சுக்காரர்களில் 27 விழுக்-காடும், பெல்ஜியத்துக்காரர்களில் 27 விழுக்காடும், ஜெர்மானியர்களில் 25 விழுக்காடும், பிரிட்டிஷ் காரர்களில் 20 விழுக்காடும் கடவுள் நம்பிக்-கையோ எந்த ஒரு ஆவி அல்லது வாழ்க்கையை இயக்கும் சக்தி இருப்பதில் நம்பிக்கையோ அற்றவர்கள் என்பதை 2005 இல் அய்ரோப்பா பற்றி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்-கிறது. ஸ்கான்டிநேவிய மக்களில் அதிக எண்-ணிக்கை கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அற்ற-வர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நாத்தி-கம் மிகவும் பிரபலமடைந்து வருதாக பல ஆய்வு-கள் தெரிவிக்கின்றன. 2007 இல் பியூ ஆய்வின்படி 5 விழுக்காட்டினரும், 2008 ஹாரிஸ் கணக்கெடுப்-பின்படி 19 விழுக்காட்டினரும் தங்களை நாத்தி-கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
- சுபோத் வர்மா-
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

Source: viduthalai.com

Saturday, June 5, 2010

How to maintain a refrigerator at home?

Refrigerator (165 liter):
Energy consumption 200 watts of electric power. Ensure that your refrigerator is functioning properly as it is one of the most energy consuming home appliances.
• Always ensure the cleanliness of the capacitor located at the rear side of the refrigerator.
• Ensure that the refrigerator door is tightly closed and do not open it repetitively. Close the door quickly whenever you open it in order to prevent the cold air from escaping.
Take into account the arrangement of items in the refrigerator so as to ease their handling. Leave a space between the food items inside the fridge in order to allow for air movement around them. However, the opposite procedure is recommended for the Freezer which should be fully loaded and if necessary fill the blanks with ice cube bags.
• Melt the ice from time to time so that its thickness shall not exceed ¼ inch.
• When you leave your home for a week or more, clean the refrigerator and
keep the door open.
• When you buy a refrigerator try to know the approximate annual running cost.
• During summer time, use a Coleman cooler for keeping cold water handy as this reduces the number of times you open the refrigerator door.

Monday, May 24, 2010

இராமனுக்கு சீதை தங்கை; இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்



வரலாற்றுச் சுவடுகள்
இராமனுக்கு சீதை தங்கை; இராவணனுக்கு சீதை மகள்
இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்-கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனி வாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்-கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்-தராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தரா-மா-யணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத் திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சு-மணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்-பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்-தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்-களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்-பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்-களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரி-களைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமையனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமான-பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.
இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்க மிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆ-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்-பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை-யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் இராவணன் இராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்ட-தாகவும், இராவணனுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை இராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு-போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்ட-தாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது இராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய இராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்ப-தற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளு-டைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் இராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 -ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற இராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.
- ‘குடிஅரசு’ கட்டுரை, 03.03.1929

Saturday, May 22, 2010

பாரீர் பார்ப்பனர்களை!




பாரீர் பார்ப்பனர்களை!

பார்ப்பனர்கள் யார்? இந்த 2010லும் அவர்களின் குணம் எப்படிப்-பட்டது என்பதைத் தெரிந்துகொள்-வதற்கு மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படாது.

தமிழ் - _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்தில் அவர்களின் பார்வை எத்தகை-யது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பளிச் சென்று புலப்பட்டு விடும்.

மேட்டுக்குடி மக்களை மேலோட்-டமாகப் பார்த்து கவிழ்ந்து போகும் கபோதிகளுக்கு அவர்களின் உண்மை உருவம் புலப்படவே புலப்படாது.

செம்மொழி என்று தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். காலங் கடந்தாவது இந்த அங்கீகாரம் வந்து சேர்ந்ததே என்று ஆனந்தப் பண்பாடினர்; காரணம் அவர்கள் மொழியால், வழியால், விழியால் தமிழர்கள்.

ஆனால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும் சுடுகாட்டு நெருப்பாக எரிந்து தொலைகிறது.

“தினமலர்’’ (13.6.2004) அந்துமணி பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி: தமிழ்மொழியைச் செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெச-வாளர் வீட்டுத் தறி, நிற்காமல் இயங்-கும்; ஒரு வேளைக் கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளை-களைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பர் சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்! இதுதான் பதில்.

இதில் பார்ப்பனர்களின் வயிற்றெ-ரிச்சல் தெரிகிறதே தவிர, நியாயமான விவாதங்கள் ஏதாவது உள்ளனவா?


தமிழ் செம்மொழி ஆனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும் என்று யார் சொன்னார்கள்? அதே நேரத்தில் அந்த ஏழை நெசவாளி செம்மொழி என்று அறிவிப்பு வந்தது குறித்து அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்பான்; காரணம் அவன் தமிழன்! இவர்களாகவே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, இவர்களாகவே தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் என்றால் இவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சக தமிழர்களிடம் தமிழிலேயே பேச வேண்டும் என்பது “தினமலரின்‘ கருத்தாகக் கொள்ளலாமா? அப்படியென்றால் அதற்காக ‘தினமலர்’ எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்-கிறது? பதில்களை இடித்துக் கூறியிருக்-கிறது?

அடுத்து ‘தினமலரில்’ (18.8.2009 பக்கம் 10) டவுட் தனபாலு பகுதியில் ஒரு நஞ்சு!

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்-திற்குக் கருநாடகா, ஆண்டுக்கு 20 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப் படும். கருநாடகா அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து-விட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்-னாங்க.. பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமோ இல்லையா...? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...? இப்படிஒரு பதில்!

பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்-களின் முயற்சியால் திறந்து வைக்கப்-பட்டது. இதுகண்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் உவகை அடைகிறான்.

ஆனால், தினமலர் கூட்டத்துக்கு மட்டும் கேலியாகவும், இன்னொரு வகையில் வேதனையாகவும் இருக்கிறது _ கடப்பாரையால் வயிற்றை இடித்துக் கொள்கிறது என்றால், இதன் பொருள். அவர்கள் தமிழர்கள் இல்லை. அத-னால் மகிழ்ச்சியும் இல்லை _ இதுதானே உண்மை?

இந்த வாரம் “துக்ளக்’’ இதழில் (19.5.2010 _ பக்கம் 25) ஒரு கேள்வி பதில்.

கேள்வி: “எல்லா உள்ளாட்சி அலு-வலகங்களிலும் இனி “தமிழ் வாழ்க’’ என்ற நியான் விளக்குகள் வைக்கப்-படும்’’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன? இதனால் தமிழ் வாழ்ந்து விடுமா?

பதில்: இதனால்தான் தமிழ் வாழும் என்றால் -_ அதைவிடத் தமிழுக்கு வேறு கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்காக அல்ல. நியான் விளக்குக் காண்ட்ராக்ட் எடுப்பவர் வாழ, இது வழி செய்யும். அது போதுமே.

எப்படியிருக்கிறது பதில்! தமிழ், தமிழன் என்ற உணர்வு இருந்திருக்கு-மேயானால் இந்தக் கோணத்தில் இந்தப் பூணூல் எழுதுமா?

“தமிழ் வாழ்க’’ என்று நியான் விளக்குப் போடுவது கான்ட்ராக்ட் எடுப்பவர் வாழ என்கிற திசையில் புத்தி மேயப் போகிறது என்றால் இந்தப் புரோக்கர் கூட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதே “துக்ளக்’கில் துர்வாசர் ஒருவர் எழுதுகிறார் _ சமச்சீர் கல்விபற்றி..

இருக்கிற கல்வியே ஒழுங்காக இல்லை. இதில் சமச்சீர் கல்வி என்ன வேண்டிக் கிடக்கிறது?

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை வாசிக்கத் தெரியாத அய்ந்-தாம் வகுப்பு மாணவர்கள், இங்கே மலிந்து கிடக்க, தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடு எல்லாம் எதற்கு என்று கிறுக்குகிறது.

எங்கே சுற்றி வந்தாலும் தமிழை, தமிழர்களை கொச்சைப்படுத்தியே தீருவது என்ற கொழுப்பில் எழுதுகிறது ஒரு கொம்பேறிக் கூட்டம்.

நம்மால் திருப்பிக் கேட்க முடியாதா? குழவிக் கல்லுக்கெல்லாம் கும்பாபி-ஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே, ஏழை வீட்டுத் தறி தடையில்லாமல் ஓடுமா, ஒரு வேளைக் கஞ்சிக்கே வழிஇல்லாதவருக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்குமா?

இந்தக் கேள்விக்கு, இந்தச் சமஸ்-கிருதக் கூட்டம் பதிலைச் சொல்லுமா?

கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் நடமாடிக் கொண்டிருக்கும் சங்கராச்-சாரியாருக்கு ஊருக்கு ஊர் பவள விழா கொண்டாடிக் கொண்டு இருக்-கிறார்களே _ இதனால் நாட்டுக்கு என்ன பயன்? அவருக்குப் பவள விழா கொண்டாடினால் மாதம் மும்மாரி பொழியுமா?

பக்திப் பள்ளத்தில் தமிழர்கள் குப்புற விழுந்து கிடப்பதால், கேட்கும் திராணியற்றவர்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொன்னவர்கள், தமிழைத் தரக் குறைவாக கேலிப் பொருளாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களின் இந்த மமதைப் போக்கை அறிஞர் அண்ணா அழகாகப் படம் பிடித்தார்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்-மொழியெனக் கருதுவதில்லை. அவர்-களின் எண்ணமெல்லாம் வடமொழி-யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான் (“திராவிடநாடு’’ 2.11.1947).

அண்ணாவின் படப்பிடிப்பைப் பார்த்த பிறகாவது பரிதாபத்துக்குரிய நமது “பஞ்சமர்களும்’’ ‘‘சூத்திரர்களும்’’ அடையாளம் காண்பார்களா பார்ப்-பனர்களை?

Tuesday, May 18, 2010

அனைவரும் படியுங்கள்-கண்டிப்பாக


நட்சத்திர ஜன்னலில் விமலா எட்டிப் பார்க்கிறார்

'சூரியவம்சம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கணவர் படிக்காதவர். பட்டப்படிப்பு முடித்த மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவார். ஒரு குழந்தைக்கு தாயான மனைவியைப் பாசத்தோடு படிக்க அனுப்பிவைப்பார் கணவர். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' என்று கவிஞர் மு.மேத்தாவின் பாட்டு வரும். பாடல் முடிந்தவுடன் கணவரின் சொந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராகப் பணி புரிய ரயிலில் வந்து இறங்குவார் மனைவி.
15 நிமிஷங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியோடு அந்தக் காட்சியை மறந்து விடுவோம். ஆனால், காட்சி அதே.. ஆண்டுகள் மட்டும் ஐந்து... கணவர் மற்றும் குடும்பத்தார் உதவியோடு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் (அகில இந்திய அளவில் 162-வது இடம்) திருச்சியைச் சேர்ந்த விமலா (32). திருச்சி திரு.வி.க. நகரில் கணவர் குமார், மகன்கள் ஆகாஷ் (11), பிரகாஷ் (11) (இரட்டைக் குழந்தைகள்), மாமியார் உள்ளிட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் விமலா தனது வெற்றிப் பயணம் குறித்து தொடர்கிறார்...
""கரூர் பசுபதிபாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998-ல் இளநிலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தேன். கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய உயர் அதிகாரிகளைக் கண்டதும் நாமும் இதுபோல வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், இறுதியாண்டு படிப்பை முடித்ததும் திருச்சியில் அச்சகம் நடத்தி வரும் குமாருடன் (தனது கணவரைக் கைகாட்டுகிறார்) திருமணம் நடந்துவிட்டது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்.
இதற்கிடையே, 2000-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஆகாஷ், பிரகாஷ் பிறந்ததால் நான் முழுநேரமும் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கினேன்.
2004-ல் ஒரு நாள் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம் என்று ஏக்கத்தோடு கூறினேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. உனக்கு விருப்பம் இருந்தால் இந்த நொடியிலேயே படிப்பை தொடரலாம் என்றார் எந்தவித கோபமும் இல்லாமல்.
இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் அன்றே விவாதித்தேன். எனது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்கான அறிகுறி கண் முன்னால் வந்து போனது. அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.
2005-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் முதன்முதலாக பங்கேற்றேன். தோல்வியே வந்து சேர்ந்தது. இந்திய வரலாற்றை முதல் நிலைப் பாடமாகவும், தமிழ் இலக்கணத்தை முதன்மைப் பாடமாகவும் தேர்வு செய்தேன்.
திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் போட்டித் தேர்வு மையங்களிலேயே எனது நேரங்கள் கழிந்தன. 2-வது முறையும் (2006) தோல்வியே. 3-வது முறை (2007) முதல் நிலைத் தேர்விலும், 4-வது முறை (2008) முதன்மைத் தேர்விலும் வெற்றி கிடைத்தது. இருப்பினும், முழுமையாக என்னால் வெற்றி பெற முடியவில்லை.
தோல்வி ஏற்பட்டபோது எதனால் தோல்வி என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தொடர் தோல்வி என்னைப் பாதித்தாலும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தனர்.
எனது தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, ஓரளவு திருப்தியோடு 5-வது முறையாக கடந்தாண்டு (2009) தேர்வு எழுதினேன். அனைத்திலும் வெற்றி பெற்று, இப்போது குடும்பத்தார் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வயதும், திருமணமும் ஒரு தடையே இல்லை. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் புத்தகத்தை தொட்டேன். அதுதான் கஷ்டமாக இருந்தது.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற இழந்தவை சொந்த பந்தங்களின் நட்பையும். குழந்தைகளின் பாசத்தையும்தான். சொந்தக்காரர்களின் எந்த நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கஷ்டங்களுக்கு இடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
கூட்டுக் குடும்பம், கணவரின் ஒத்துழைப்பு இவை இரண்டுமே திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எனக்கு துணையாக அமைந்தவை. இவை மற்ற பெண்களுக்கும் அமைந்தால், அவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்'' என்றார் விமலா.
விமலாவின் கணவர் குமார் தொடர்கிறார்...
""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற விமலாவைவிட எனக்குத்தான் பாராட்டுகள் அதிகம் வருகின்றன. யார் வாழ்த்து கூறினாலும், உன் உதவி இல்லாமல் விமலா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்கின்றனர்.
கணவன்- மனைவிக்குள் உள்ள புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையே விமலாவுக்கு நான் செய்தவை. மேலும், எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது'' என்றார் குமார்.
பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார் குமார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் போகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்த சில நிமிஷ காட்சிகள் குமார்- விமலா தம்பதியின் வாழ்க்கையில் அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதுதானே!

நன்றி -- தினமணி செய்தி தாள்

Sunday, May 16, 2010

வீர வணக்கம்




வணக்கம் தமிழர்களே,
நம்முடைய உதிர உறவுகள் படுகொலைக்கு உட்பட்டு, இன்னும் சிரமம் அனுபவித்துக் கொண்டு உள்ளார்கள்.
வீர மரணம் அடைந்த அனைத்து தமிழர்களுக்கும் நம்முடைய வணக்கத்தை செலுத்துவோம்
நன்றி
அழகிரி.இரா

Dear Friends,
Let us pay rich tributes to the innocent tamizhs and brave tamizhans killed by the Srilankan rulers last year 18-MAY-2009
Azhagiri.R

Saturday, May 15, 2010

அட்சய திருதியையா?

அட்சய திருதியையா?


கொஞ்ச காலமாக அட்சய திருதியை அட்சய திருதியை என்ற சொல்லாடல் அதிகம் ஒலிக்கிறது.

இது மதம் சார்ந்த மசால் பொடி-தான் என்றாலும் கடந்த சில ஆண்டு-களாகத் தான் இதற்கு மவுசு அதிகரித்-துள்ளது.

வரும் 16ஆம் தேதி அட்சய திருதியை-யாம். அட்சய என்றால் அள்ள அள்ளக் குறையாதது _ வளரக் கூடியது என்று பொருளாம்.

மணிமேகலைக் காப்பியத்தில் அட்சய பாத்திரம் என்ற ஒன்று வருவதைப் படித்திருக்கலாம்.

இந்த நாள் பற்றி புராணங்கள் அள்ளிக் கொட்டுகின்றன. இந்த நாளில்தான் முதல் யுகமான கிருதாயுகம் தோன்றியதாம்.

இந்த யுகத்துக்கு ஆண்டுகள் 17 லட்சத்து 28 ஆயிரமாம்! இதுதான் முதல் யுகமாம்.

கிருதாயுகத்தின் சிறப்பு என்னவாம்? இந்த யுகத்தில் வாழ்பவருக்கு ஆயுள் எவ்வளவாம்? ஒரு லட்சம் வருடங்-களாம்.

ஒரு லட்சம் வருடம் வாழும் இவர்-களுக்குப் பால பருவம் பதினாயிரம் ஆண்டுகளாம்; காளைப் பருவம் 1032 வருடங்களாம்.

அந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்-களின் உயரம் எவ்வளவு தெரியுமா? அய்ந்து பனைமரம் அளவாம்!

இந்த யுகத்தில் வாழ்பவர்கள் மேன்மையாக வாழ்வார்களாம், துன்பம் என்பது என்னவென்றே தெரியாதாம். கல்விமான்களாகவும், குற்றமில்லாத குணம் உடையவர்களாகவும் இருப்பார்-களாம். வேதியர் வேத வேள்வியைச் செய்யத் தவறார். வணிகர் மனுநீதிப்படி பொருளைத் தேடி நல்வழியில் பயன்படுத்துவர். சூத்திரர் வேதியருக்குச் செங்கடன் பூண்டு, பூமியை உழுது பயி-ரிட்டு, அதிதிகளை ஓம்பி, அறம்புரிந்து வாழ்வர் (அபிதான சிந்தாமணி பக்கம் 1360)

இவ்வளவு சிறப்புகளையும் உடைய இந்த யுகம் பிறந்தது இந்த அட்சய திருதியையிலாம்.

ஒன்றை உயர்த்த வேண்டும் என்றால் இந்தப் பார்ப்பனர்கள் எப்படி எப்படி-யெல்லாம் கதை கட்டுவார்கள் என்ப-தற்கு இவை போதுமான தகவல்களே!

உயிர்கள் எப்பொழுது தோன்றின _- மனிதன் எப்படி பரிணாமம் பெற்றான் என்ற விஞ்ஞான வினாக்களுக்கு எல்லாம் இங்கு இடமே கிடையாது.

முள்ளு முனையிலே முந்நூறு குளம் வெட்டினேன் என்பதைவிட மோச-மான அண்டப் புளுகு இது.

மத விவகாரங்களில் அண்டப்புளுகு என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாமே புளுகுகள் என்று ஆகிவிட்ட பிறகு, அதில் உசத்தி, மட்டம் என்பது எங்கேயிருந்தது குதித்தது?

குசேலன் அன்புடன் தந்த அவலை சுவைத்த கண்ணன், அட்சய எனக் கூறி அவனை வாழ்த்தினானாம். அதனால் குசேலன் குபேரனானது அட்சய திருதியை நாளில் தானாம்.

குசேலன் பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து, எழுப்பிய கேள்வி கவனிக்கத் தகுந்தது. குலேசனுக்கு 27 குழந்தைகள் இருந்தும் அவன் குடும்பம் பசி _ பட்டினியாம்.

20 வருசத்திற்கு மேற்பட்ட ஏழு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குலேசருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்-காவது என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப் பயல்களாட்-டமாக வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி வந்திருக்-காதா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு புராண அதிகப் பிரசங்கிகள் இதுநாள் வரை பதில் சொன்னதுதான் உண்டா?

இந்த அட்சய திருதியை நாளில் கிருஷ்ணன் அட்சய என்று சொன்னா-னாம் _ குசேலன் குபேரன் ஆனானாம்.

ஒரு வகையில் பார்க்கப் போனால் சோம்பேறித் தடிப் பயல்களை வளர்த்து வருவது தான் இந்த அட்சய திருதியை என்று பொருளாகாதா?

வாட்ட சாட்டமான ஆள் பிச்சை எடுக்க வந்தால் நமது வீட்டுத் தாய்-மார்கள் சொல்லும் வார்த்தை தடிப் பயலாக இருந்து கொண்டு பிச்சை எடுக்கிறாயே! என்று கேட்பதுண்டே!

படிக்காத பாமரத் தாய்மாருக்கு இருக்கும் பொது அறிவுகூட, புத்திகூட பகவான் கிருஷ்ணனுக்கு இல்லை-யென்றால், இவனெல்லாம் ஒரு கடவுளா என்ற கேள்வி தானே எழ வேண்டும்?

அதுசரி, பக்தி என்று வந்து விட்-டால் புத்திக்கு அங்கே நுழைவு சீட்டு எது?

பாஞ்சாலியின் மானம் காக்க பரந்தாமன் ஆடை வழங்கியதும் இந்த அட்சய திருதியை நாளில் தானாம்.

இன்றைக்கு அந்த பரந்தாமன் இருக்கின்றானா _ இல்லையா? எத்தனைப் பாஞ்சாலிகள் ஒவ்வொரு நாளும் துகில் உரியப் படுகிறார்கள்? அவர்-களுக்கெல்லாம் அந்தப் பரந்-தாமன் சேலைகளை வழங்க வருவ-தில்லையே - _ ஏன்?

திருமகளின் எட்டு அவதாரங்களுள் அய்ஸ்வரிய லட்சுமி தான்ய லட்சுமி தோன்-றிய நாளும் இதே நாளில்-தானாம்.

இந்த நாளில் குன்றிமணி அளவு பவுன் வாங்கினால் அது ஆண்டு பூரா-வும் பெருகிக் கொண்டே இருக்குமாம்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் 26.5 விழுக்காடு குடும்பங்களும், நகர்ப்புறங்-களில் 17.-8 விழுக்காடு மக்களும் கடனாளிகளாக இருக்கிறார்கள்.

இந்திய விவசாயிகள் ஒவ்வொருவர் தலையிலும் விழுந்திருக்கும் கடன் தொகை ரூ.25985.

இந்தியாவில் 77 விழுக்காடு மக்-களின் ஒரு நாளைய வருவாய் ரூ.20.

இப்படி வறுமை நோய் ஆயிரங் கால்களோடு நடமாடிக் கொண்டு இருக்கும் இந்த நாட்டில் அட்சய திருதியை என்று ஒருநாளாம்.

இந்நாளில் பொருள்கள் வாங்கி-னால் கொழியே கொழியோயென்று கொழிக்குமாம்.

இன்றைக்கு ஒரு சவரன் பவுன் விலை ரூ.13512 நாள் ஒன்றுக்கு ரூ.20 சம்பாதிக்கும் ஒரு ஏழை இந்த அட்சய திருதியையில் ஒரு கிராம் தங்கம் வாங்கும் நிலையில் இருக்கிறானா?

அய்ஸ்வர்ய லட்சுமி கடவுளாக உள்ள நாட்டில் இந்த வறுமைக்-கோடுகள் இருப்பது ஏன்? விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாள்வது ஏன்?

ஒரு கணம், ஒரே ஒரு கணம் சிந்தித்-தால் குடி மூழ்கியா போய் விடும்!

அண்மைக் காலத்தில் நகை வியா-பாரிகள் விரித்த பிரச்சார வலையில், மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன மக்கள் விழுந்து விடுகிறார்கள். இந்த நாளில் பவுன் வாங்கினால், அதிர்ஷ்ட தேவதை கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவாளாமே ஆண்டுக்கு ஒரு நாள் - _ அதனை நழுவ விட்டு விட-லாமா என்ற ஏக்கத்தைப் பாமர மக்கள் மத்தியில்கூட ஏற்படுத்துவதுதான் இந்த அட்சய திருதியை பற்றிய மலிவான விளம்பரங்கள்.

கடந்த ஆண்டு இந்த நாளில் நகை வாங்கியவர்கள்வீட்டில் ஓராண்டுக்குள் எத்தனை சவரன் குட்டி போட்டது? ஆதாரப் பூர்வமாக அறிவிக்கத் தயாரா?

அம்பானி வீட்டிலும், முருகேஷ் வீட்டிலும் குட்டி போட்டு இருக்கலாம். -- நாம் கேட்பது _ பாமர மக்கள் வீட்டில் எத்தனை பவுன் எகிறிக் குதித்தது என்பதுதான்.

நியாயமாக தங்கத்தை வாங்குவதை ஊக்கப்படுத்தவே கூடாது. தங்கம் அரசாங்கத்தின் கஜானாவில் இருக்க வேண்டிய பொருள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது தேவை என்பது அடிப்படைப் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியுமே!

சந்திரன் சாப விமோசனம் பெற்ற-தும் இந்த நாளில்தானாம். அது என்ன சந்திரனைப் பீடித்த சாபம்?

தேவகுருவான வியாழ பகவானின் தர்மபத்தினியை குருவின் சீடானான சந்திரன் கற்பழித்தானாம். அதன் காரணமாக சந்திரனைப் பார்த்து வியாழ பகவானான குரு, உமது கலை நாளுக்கொன்றாய் குறைந்து போகக் கடவது என்று சாபம் விட்டானாம்.

அந்த சாபம் நீங்கிய நாள்தான் அட்சய திருதியையாம்.

என்ன யோக்கியதை குரு பத்தினி-யைக் கற்பழித்தவன் இந்த நாட்டில் கடவுள் _ அதற்குச் சாபமாம் - _ சாபம் நீங்கிட ஒரு நாளாம்.

முட்டாள்தனமும், முற்றிப்போன ஒழுக்கக்கேடும் ஒன்றை இன்னொன்று விஞ்சியது என்று சொல்லும் அளவுக்கு காட்டுவிலங்காண்டித்தனமாய் எந்தக் காலத்திலோ, எந்த ஒரு கிறுக்கனோ கிறுக்கி வைத்த பைத்தியக்கார உளறல்கள் எல்லாம் மதக்கருத்தாகவும், சடங்குகளாகவும் உருவெடுத்தன என்பதுதானே உண்மை.

ஏதோ அன்று உளறினான்; அதை உதறிவிட்டு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதுதானே அறிவுக்கு அழகு?

அந்தக் காட்டுவிலங்காண்டித்-தனத்தை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கட்டிக் கொண்டு அழுவது என்றால் இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா?

பச்சை வண்ண சேலை கடைகளில் தேங்கி விட்டால் வியாபாரிகள் ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். இந்த வருஷம் பொறந்தது சரியானதல்ல! வீட்டில் மூத்த சகோதரர்களுக்கு வில்லங்கங்கள். உடனே சகோதரி-களுக்குப் பச்சைக்கலர் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். அவ்-வளவுதான தேங்கிக் கிடந்த பச்சைப் புடவைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து போய்விடும்.

சிகப்புக் கலர் சேலைகள் தேங்கி கிடந்தால் அதற்கொரு அய்திகத்தை அவிழ்த்துவிடுவார்கள். உடனே ஆடு மாடுகள் போல பக்தர்கள் ஜவுளி கடைகளுக்குப் படையெடுப்பார்கள்.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த அட்சய திருதியை என்பதும்.

நகை வியாபாரி வைத்த நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த ஒரு நாளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் நகைகள் எல்லாம் காலியாகிவிடும்.

அவனுக்குக் கல்லாப் பெட்டி நிரம்பும். கடன் வாங்கி பவுன் வாங்கிய பாமர மக்களுக்கோ வட்டிதான் வள-ரும். அடகு வைத்த பொருள்தான் மூழ்கும்.

பக்தி -_ வியாபாரம் ஆகிவிட்டது என்ப-தற்கு வேறு எடுத்துக்காட்டும் தேவையோ!

Source: viduthalai.com

Saturday, April 24, 2010

நாத்திகம் என்பது - தந்தை பெரியார்



பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது

நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாததே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை என்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு
சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.



நாத்திகத்தின் பிறப்படம்

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தை செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

Monday, April 19, 2010

தமிழா

தமிழா ,

நீ வாழ்வது தமிழ்நாடா அல்ல நெஞ்சில் ஈரமில்லா கொடிய காட்டுமிராண்டியின் ஆதிக்கத்தின் பிடியில் வாழ்கிறோமா?
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராம், மாவீரர் பிரபாகரன் அவர்களின் தாய்க்கு தாய் தமிழகத்தில் மருத்துவம் மறுக்கப்படவேண்டிய காரணம் என்ன? புறநானூற்றில் வீரப் பெண்மணிகளின் வாழ்க்கையை நாமெல்லாம் வாசித்தோமே அது என்ன நிகழ்வு இல்லையா? மற்ற இனத்தவர்களைப் போல தமிழர்கள் என்ன வெற்று வேட்டுகளா?
தமிழ்நாட்டை முதலில் நாம் மீட்க வேண்டும். நம்முடையவர்களின் தாய்க்கு இத்தகைய ஒரு நிலை வந்தால் நாம் என்ன செய்வோம், எண்ணிப் பாருங்கள், அதைத் தான் நாம் செய்ய வேண்டும்.
இந்த மண்ணில் மருத்துவம் தரவில்லை என்றால், மற்ற இனத்தவர்களுக்கெல்லாம் ஏன் இங்கே மருத்துவம் நாம் தர வேண்டும்?

தமிழா விழித்துக் கொள் , இல்லையேல் உன் சந்ததியே இங்கு இல்லாமல் பொய் விடக் கூடும்
தமிழர்களே தன்மானம் பெறுங்கள்

இரா.அழகிரி,
நெல்லிக்குப்பம்.

Tuesday, March 30, 2010

நண்பர்களே,

நண்பர்களே,
இறைமறுப்பு தவிர்த்து பெரியாரை பிடிக்கும். குமுதம் வார இதழில் .....பெரியார்தாசன்.
இனி அப்து 'அல்வா' இப்படியும் சொல்வார்

" கற்பு தவிர்த்து .......கண்ணகியை பிடிக்கும்
உண்மை தவிர்த்து ..... அரிச்சந்திரனை பிடிக்கும்
அகிம்சை தவிர்த்து .... காந்தியை பிடிக்கும்
பொதுவுடைமை தவிர்த்து ... மார்க்சை பிடிக்கும் "

" அசலில் தள்ளுபடி .... அறிவோம்
அசலே தள்ளுபடி .... அப்து 'அல்வா'விடம்"

தள்ளுபடியில்...... பெரியாரைத்தர நாங்கள் தயாரில்லை

அன்புடன்,
வீ. அழகரசன்

Monday, March 22, 2010

வைக்கம் போராட்டம்



வைக்கம் போராட்டம்

‘வைக்கம் போராட்டம் ‘ என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.

மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச் சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார்.வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்த நாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்

வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக நடந்துகூடச் செல்லக் கூடாது என்பது அப்போதிருந்த எழுதப்படாத விதி. மற்றவர்கள் மாதவனைத் தடுக்கிறார்கள். வழக்கறிஞர் மாதவன் கோயில் பாதையில் நடப்பதைத் தடுத்த சம்பவம் பலருக்குக் கோபத்தை உருவாக்கியது. சத்தியாகிரகம் நடத்த டி.கே.மாதவன், கேரளக் காங்கிரஸ் தலைவர் கே.பி. கேசவமேனன் மற்றும் பலர் சேர்ந்து முடிவெடுத்தனர்.

வைக்கம் ஊரில் நடுவில் கோயில் இருக்கிறது. அதன் நான்கு வாசலுக்கு எதிரிலும் நான்கு நேர் வீதிகளும் கோயில் மதிற் சுவரைச் சுற்றி பிரகாரத் தெருக்களும் இருந்தன. இந்த வீதிகள் எவற்றிலுமே கீழ்ச் சாதிக்காரர்களும், தீண்டத்தகாதாரும் நடக்கக் கூடாது. ஒரு மைல் தூரம் வேறு பாதையில் சுற்றிக் கொண்டுதான் எதிர்ரோட்டிற்குப் போக வேண்டும். இதை எதிர்த்து சக்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியவுடன் வழக்கறிஞர் மாதவன், பாரிஸ்டர் கேசவ மேனன், டிகே மாதவன், ஜார்ஜ் ஜோசப் முதலியவர்கள் உட்பட பலர் அரசின் ஆணைப்படி கைது செய்யப்பட்டனர்.

படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ,ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர். “நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டுவிடுமே என்று கவலைப்படுகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். மன்னனுக்கு ஏற்கெனவே பெரியார் பழக்கமானவர். மன்னன் ஒவ்வொரு முறை சென்னை சென்ற போதும் ஈரோட்டிற்கு வந்து ரயில் மாற வேண்டும். சில சமயங்களில் இதற்கு அக்காலத்தில் ஒரிரு நாட்கள் ஆகும். அந்தச் சமயத்தில் மன்னர் பெரியாரின் விருந்தினராக பெரியார் வீட்டிலேயே தங்குவார்.

இந்தப் பழக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, வெள்ளைக்கார போலீஸ் கமிஷனர் மற்றும் தாசில்தாரை அனுப்பி பெரியாரை வரவேற்றான் மன்னன். பெரியாருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கச் சொல்லி மன்னன் ஏற்பாடு செய்திருந்தாலும், பெரியார் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார்.

பத்து நாட்கள் பொறுத்துப் பார்த்த மன்னன் ஆத்திரமடைந்தான். போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தான். காவல்துறை உயர் அதிகாரிகளை அனுப்பிப பெரியாரைக் கைது செய்தான். போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகியது. பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.

சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்கும், பெரியார் உள்ளிட்ட போராளிகளை அழிப்பதற்கும் அங்குள்ள நம்பூதிரிகளும், சில வைதீகர்களும் சேர்ந்து ‘சத்ரு சம்ஸ்கார யாகம்’ என்ற ஒரு யாகத்தை தடபுடலாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து நடத்தினர். பெரியார் சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது இந்த யாகம் நடத்தப்பட்டது. “சிறைச்சாலையிலிருக்கும் ராமசாமி நாயக்கரையும், மற்றவர்களையும், யாகம் நடத்தும்போது புறப்படுகிற பூதம் நேராக சிறைக்குச் சென்று அவர்களின் கழுத்தைப் பிடித்து விடும். உடனே அவர்கள் இறந்து விடுவார்கள்” என்று யாகம் நடத்திய நம்பூதிரிகள் கூறினர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக மன்னர் இறந்து விட்டார். பெரியாருக்கு நடத்திய யாகம் மன்னரைக் கொன்று விட்டதாக சிறையில் உடனிருந்த போராளிகள் கூறினர். அப்போது பெரியார், நம்மைக் கொல்வதற்கு மன்னர் யாகத்தை நம்பியது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையோ, அதைவிட பலமடங்கு முட்டாள்தனம் அந்த யாகத்தினால் தான் மன்னர் இறந்து விட்டார் என்று சொல்வது என்று கூறினார். இவ்வாறு பல கோணங்களிலும், பலவடிவங்களிலும் வைக்கத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் பல எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெற்றது.

நன்றி : கீற்று

Saturday, March 13, 2010

Heart Attacks And Drinking Warm Water



A very good article which takes two minutes to read. I'm sending this to persons I care about.......I hope you do too!!!

Heart Attacks And Drinking Warm Water




This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt theirdrinking habit while eating.

For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestinefaster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.








Common Symptoms Of Heart Attack...
A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left arm hurting . Be aware of intense painin the jaw line.

You may never have the first chest pain during the course of a heart attack. Nauseaand intense sweatingare also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.


A cardiologistsays if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life... So, please be a true friend and send this article to all your friends you care about.


I JUST DID

Friday, February 26, 2010

கிருஷ்ணாவதாரக் கிழிசல்கள்




கிருஷ்ணாவதாரக் கிழிசல்கள்



கிருஷ்ணன் பிறந்த இடம் ஒரு சிறைச் சாலை. கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் -- திருட்டுத் தனமாகக் கொண்டு போய் ஆயர்பாடியில் கிருஷ்ணனைப் போடுகிறான்; பின் ஓடுகிறான். ஆயர்பாடி எனப்படும் கோகுலத்தின் தலைவன் நந்தகோபன் --- அனாதையாகக் கிடந்த கிருஷ்ணனை எடுத்துப் போய் தன மனைவி யசோதையிடம் தருகிறான். தாயில்லாப் பிள்ளையாயிற்றே என ஆயர்பாடிப் பெண்கள் பலர் கிருஷ்ணனுக்குப் பால் தருகின்றனர். பால் தரும் மார்பகங்களைக்கூட, காட்டுமிராண்டியைக் கடித்து சேதப்படுத்திய நாசக்காரன் கிருஷ்ணன்.
இதை அடுத்து பெண்கள் கிருஷ்ணனுக்கு தங்கள் உடற்பாலை தராமல் கைவிட --- மாட்டு பாலே கதியென வளர்ந்தான் கிருஷ்ணன். அத்தோடு மாடுகள் மேய்க்கவும்; மிரட்டப்பட்டு விரட்டப்பட்டான் கிருஷ்ணன். வெயிலில் மாடுகளை மேய்த்தால், கிருஷ்ணனின் நிறம் கொடூரமாகக் கருத்தது. சட்டி கரி நிறத்தை அடைந்தால் தான் கோபாலகிருஷ்ணன் என இவன் அழைக்கப்பட்டான்.

(கோ - பசு; பாலன்- சிறுவன்; கிருஷ்ணன்- கருப்பன்)
ஆயர்பாடியில் கிருஷ்ணன் செய்யாத சேட்டைகளே இல்லை. ஆள் இல்லாத வீடுகளில் புகுந்து - பால், தயிர், வெண்ணை ஆகியவற்றைத் திருடி ஏப்பமிடுவான். பலமுறை இத்தகைய திருட்டின் போது சிக்கிய கிருஷ்ணன் உரலில் கட்டிப்போட்டு தயிர் கடையும் மத்தால் தாராளமாகச் சாத்திய பெண்கள் ஏராளம். அது மட்டுமா? கணவன் இல்லாத வீடுகளாகப் பார்த்து அத்து மீறி நுழைவதும், அங்குள்ள பெண்களை கதற கதறக் கற்பழித்துச் சிதரப்படிபதும் கிருஷ்ணனின் பொழுதுபோக்கு.
ஆயர்க்குலப் பெண்கள் யமுனை நதிக்குக் குளிக்கப் போனால், கபடன் கிருஷ்ணனுக்குக் குஷியோ குஷி. அந்தப் பெண்கள் அறியாமலேயே பின் தொடர்வதும், அந்தப் பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையோரம் வைத்து விட்டுக் குளிக்கையில் அந்த ஆடைகளைத் திருடி குரங்கு போல் மரத்தில் ஏறித் தொற்றி கொள்வதிலுந்தான் கிருஷ்ணனுக்கு ருசி; குஷி! ஆடையின்றிப் பரிதவிக்கும் பெண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடி கரையேறினால் தான் ஆடைகளைத் தருவேன் என கிருஷ்ணன் நிபந்தனை விதிப்பானாம். அப்படியே அப்பெண்களின் அங்க அழகுகளை ஆதியோடந்தமாக ரசித்து ருசித்தவன் கிருஷ்ணன். ஜாலியான கடவுள் இந்த கிருஷ்ணன்.

கிருஷ்ணனை வளர்த்த நந்தகோனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் பலராமன் தானாம். இவனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஆகவே ஆகாது. தான் செய்த தவறுகளையெல்லாம் பலராமன் மீது சுமத்தினால் ஒழிய தூக்கமே வராதாம் கிருஷ்ணனுக்கு. தனது தங்கை சுபத்திரையைத் துரியோதனனுக்கு மணமுடிக்க விரும்பினான் பலராமன். ஆனால் கிருஷ்ணனோ ---- அர்ச்சுனனுக்குத் தான் சுபத்திரை வாழ்க்கைப்பட வேண்டும் என அடம் பிடித்தான். இந்த அட்டக்காசத்தால் பலராமனுடன் கிருஷ்ணனின் வலுச்சன்டையும், வம்புச் சண்டையும் மோசமாக நடந்தன.

முன்பொருமுறை பலராமனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். இங்கே இன்னொரு பலராமன் தலைகாடுகிறான். குழப்ப குட்டையில் வண்டல் மேடாக இருக்கிறது கிருஷ்ணனின் கட்டுக்கதை.
பாண்டவர்கள் காடேக; குருஷேத்திரப் போர் மூல இதில் பல்லாயிரம் பேர் மாலை ஏற்பாடு செய்த வஞ்ச நெஞ்சன் கிருஷ்ணன். இப்படியும் ஒரு கடவுள்! இவனை வழிபடவும் கழிசடைகள்! வெட்க்ககேடு!