AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, April 19, 2010

தமிழா

தமிழா ,

நீ வாழ்வது தமிழ்நாடா அல்ல நெஞ்சில் ஈரமில்லா கொடிய காட்டுமிராண்டியின் ஆதிக்கத்தின் பிடியில் வாழ்கிறோமா?
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராம், மாவீரர் பிரபாகரன் அவர்களின் தாய்க்கு தாய் தமிழகத்தில் மருத்துவம் மறுக்கப்படவேண்டிய காரணம் என்ன? புறநானூற்றில் வீரப் பெண்மணிகளின் வாழ்க்கையை நாமெல்லாம் வாசித்தோமே அது என்ன நிகழ்வு இல்லையா? மற்ற இனத்தவர்களைப் போல தமிழர்கள் என்ன வெற்று வேட்டுகளா?
தமிழ்நாட்டை முதலில் நாம் மீட்க வேண்டும். நம்முடையவர்களின் தாய்க்கு இத்தகைய ஒரு நிலை வந்தால் நாம் என்ன செய்வோம், எண்ணிப் பாருங்கள், அதைத் தான் நாம் செய்ய வேண்டும்.
இந்த மண்ணில் மருத்துவம் தரவில்லை என்றால், மற்ற இனத்தவர்களுக்கெல்லாம் ஏன் இங்கே மருத்துவம் நாம் தர வேண்டும்?

தமிழா விழித்துக் கொள் , இல்லையேல் உன் சந்ததியே இங்கு இல்லாமல் பொய் விடக் கூடும்
தமிழர்களே தன்மானம் பெறுங்கள்

இரா.அழகிரி,
நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment