AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, February 26, 2010

பாரதிதாசனின் ஆக்கங்கள்



பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
பாண்டியன் பரிசு (காப்பியம்)
எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
குடும்ப விளக்கு (கவிதை நூல்)
இருண்ட வீடு (கவிதை நூல்)
அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
இசையமுது (கவிதை நூல்)
அகத்தியன் விட்ட புதுக்கரடி
பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
பாரதசக்தி நிலையம் (1944)
இசையமுதம் (இரண்டாம் பாகம்)
பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
குடியரசுப் பதிப்பகம் (1939)
இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
குயில் (1948) எதிர்பாராத முத்தம்
வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
எது பழிப்பு
குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
குயில் (1948)
கண்ணகி புரட்சிக் காப்பியம்
அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
கற்புக் காப்பியம்
குயில் (1960)
காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
முல்லைப் பதிப்பகம் (1944)
குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
தேனருவி இசைப் பாடல்கள்
பாரதிதாசன் பதிப்பகம் (1955)
நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
நீலவண்ணன் புறப்பாடு
பாண்டியன் பரிசு
முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
பாரதிதாசன் பதிப்பகம் (1952)
பாரதிதாசன் நாடகங்கள்
பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
பெண்கள் விடுதலை
பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
மணிமேகலை வெண்பா
அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
தமிழுக்கு அமுதென்று பேர்
வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
புகழ் மலர்கள் நாள் மலர்கள்
தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

பெருஞ்சித்திரனாரின் நூல்கள்



பெருஞ்சித்திரனாரின் நூல்கள்

* எண்சுவை எண்பது
* பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
* ஐயை
* கொய்யாக் கனி
* கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
* பள்ளிப் பறவைகள்
* மகபுகுவஞ்சி
* கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
* நூறாசிரியம்
* தன்னுணர்வு
* இளமை உணர்வுகள்
* பாவேந்தர் பாரதிதாசன்
* இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
* வாழ்வியல் முப்பது
* ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
* உலகியல் நூறு
* அறுபருவத் திருக்கூத்து
* சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
* இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
* செயலும் செயல்திறனும்
* தமிழீழம்
* ஓ! ஓ! தமிழர்களே
* தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
* நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
* இளமை விடியல்
* இட்ட சாவம் முட்டியது
* நமக்குள் நாம்...

Monday, February 22, 2010

எழுவாய் நீ நெருப்பாய்!



எழுவாய் நீ நெருப்பாய்!

தமிழா நீ தமிழ் வாழப்

பணி ஆற்று

தமிழல்லவா உன்னை

இயக்கும் உயிர்க்காற்று

உறவை நீ இழக்காதே

தமிழையே மொழிவாய்

பிறமொழி கலக்காதே

கலந்தால் நீ அழிவாய்

இசைவிழா மேடையில்

தமிழை முழங்கு

வசையாரும் பாடினால்

வரலாற்றை விளக்கு

மண்மீதில் தமிழ்ப்புலவன்

மனம் நோக விடாதே

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்

உணவை நீ தொடாதே

தமிழ்வாழ உழைப்போர்க்கு

துணையாக இருப்பாய்

தமிழையார் எதிர்த்தாலும்

எழுவாய் நீ நெருப்பாய்!

-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்-

கந்தசஷ்டி

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.

” உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்” என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்தஉலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு சிவன், “நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது” என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு ‘காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்’ என்று கூறினாராம். அதன் படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் , முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால் , விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?


தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!


பொன்மொழிகள்

பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,

அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,

இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.

புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,

இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்

கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை

பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்

பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்

அறுத்தெரியட்டும். அல்லது -

புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்

கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
—————————–
பெரியார் கேட்கிறார்?

நமது இலக்கியங்கள் யாவும்

நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக

எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு

என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ!

அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும்

வைத்திருக்க வேண்டுமல்லவா?
——————————————–
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,

ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,

ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு

ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.

ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்

ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை

என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்

எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-

என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர

மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில்

வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே

இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன்

இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இழி நிலை

பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லையா?

ஆகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டுழியமாய்

நடத்தலாமா? என்று கேட்கிறேன்.
———————————————————–
பெரியார் சொல்கிறார்!

மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய

யோக்கியதையே எடுத்துக் கொண்டால்

அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்

எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-

தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்

உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,

இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி

சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்

ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும்,

சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர்

பெண் ஜாதியான வாசுகியைப் போலவும்-

நளாயினியைப் போலவும் இருக்கத்

தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
———————————————————
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே…

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.

உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.

இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,

பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக

ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்

மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.

இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்

நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.

இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்

மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.

Friday, February 19, 2010

அண்ணாவின் அரும்பணிகள் - பத்து



அண்ணாவின் அரும்பணிகள் - பத்து


1967 இல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று இருந்ததை 'தமிழ்நாடு' என்று பெயரிட்டார்

தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டு வந்தார்

தமிழக மக்களின் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு இந்திய துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்த போது தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும் தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்

பதவி ஏற்கும் போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி ----- உளமார எனச் சொல்லி பதவி ஏற்றார்

அண்ணா அரசு அமைந்ததும் 'ஆகாஷவாணி' என்பது 'வானொலி' என அழைக்கப்பட்டது
பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டது

கலப்பு மணம் செய்துக் கொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது
ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்

1968 இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்

பள்ளிகளில் என் சி சி அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலக்குகள் --- தந்தை பெரியார் (வரலாறு)



பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.
சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.


சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.

ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.

கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.

அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது.

கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது.

இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.