AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, December 27, 2010


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

நண்பர்களே, தமிழர்களே,
எதிர் வரும் தமிழர் திருநாளாம், தமிழ்ப் புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளாக சிலவற்றை கூற விரும்புகிறேன்....

இதோ...

நம்முடைய பெயர்களுக்கு முன் ஆங்கில எழுத்தை (முதல் எழுத்தாக) பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்...

நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர்களை சூட்டுவோமாக...

நம்முடைய தாய் மொழியில் கையொப்பம் இடுவோமாக....

பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், பிறந்த நாளாகட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதை தவிர்ப்போம்...

நம் இல்லங்களின், கடைகளின், வணிக நிறுவனங்களின் பெயர்களை இனிய தமிழில் சூட்டுவோமாக....

வழிபாடுகளை தமிழில் செய்வீர்களாக...

வாகனங்களில் தங்களின் விருப்பமான பெயர்களை ஒட்ட நினைப்பவர்கள் தமிழில் ஓட்டலாமே....

தமிழர்களின் வணிக நிறுவனங்களிலே நம்முடைய வாணிபத்தை செய்வோமாக...

தமிழர்களால் நடத்தப்படும் இதழ்களை மட்டுமே விலைக் கொடுத்து வாங்குவோமாக...

நாம் உரையாடிக்கொண்டிருக்கும் (ஓர்குட், பேஸ் புக் .... ) போன்ற சமூக தளங்களில், நல்ல தமிழ் பெயர்களை அடையாளமாகக் கொண்டு உரையாடலாமே... நம்முடைய முகமூடிகளை தவிர்த்து உண்மையான முகத்தை உலகிற்கு காட்டலாமே....


மேற்க்கூறப்பட்டுள்ளவைகளை, நம்மால் தான் செய்யப் பட வேண்டும்...மற்ற இனத்தவர்கள் சரியாகத் தான் உள்ளனர் ....
இவைகளை நாம் அனைவரும் செய்வோம் என்றால்,,,
தன் மானம், இன உணர்வு பெறுவது உறுதி....


ஓர் வேண்டுகோள்....
தமிழர்கள் அனைவரும்
"உணர்ச்சி கவிஞர். காசி.ஆனந்தனின்"
தொகுப்புகளை ஒரு முறையேனும் வாசித்தால் நல்லது....

நன்றி,
இரா.அழகிரி
தமிழகம்.

No comments:

Post a Comment